|
Latest
|
|
Written by THUMILAN SELVAKUMARAN
|
|
Tuesday, 24 January 2012 12:37 |
Stefanie Schäfer aus Pfedelbach überlebt das Unglück auf der Costa Concordia
Den lauten Knall nimmt sie gar nicht wahr. Es ist Freitag. Die Kosmetikerin hat gerade eine Übung mit dem Sicherheitsoffizier auf Deck 12 absolviert - im Spa-Bereich, ihrem Arbeitsplatz. "Der Offizier sagte noch: ,Nehmen Sie das hier ernst. Hoffentlich kommen Sie nie in eine solche Situation." Doch die Realität wird Stefanie Schäfer ein paar Minuten später einholen. "Bizarr", sagt sie heute.
Die blonde Frau mit den dunklen Augen sitzt in ihrer Wohnung in Pfedelbach und greift nach ihrer Kaffeetasse.
Sie wirkt gefasst, sie redet schnell. Die 23-Jährige ist am Sonntag vorzeitig von ihrem Arbeitseinsatz auf dem Kreuzfahrtschiff Costa Concordia zurückgekehrt.
"Dass draußen Chaos herrschte, konnten wir im geschlossenen Spa nicht sehen." Erst als kurz nach 22 Uhr, also 20 Minuten nach der Kollision mit einem Felsen vor der italienischen Insel Giglio, das Horn zweimal ertönt, realisiert das Team, dass etwas nicht stimmt. "Das war das versteckte Zeichen für die Crew, dass Wasser ins Schiff eindringt." Es gebe klare Vorgaben. "Bei diesem Alarm müssen wir an Ort und Stelle bleiben und auf Befehle warten." Vom Kapitän kommt nichts, daher warten auch die Offiziere. Eigenmächtig dürfe keiner handeln. |
|
Last Updated on Tuesday, 24 January 2012 22:32 |
|
Read more...
|
|
பத்திகள்
|
|
Written by சஞ்சயன் செல்வமாணிக்கம்
|
|
Wednesday, 07 December 2011 21:48 |
1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன். கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலறல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், சதையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போது முதன் முதலில் அவளை என்னுடன் அணைத்துக் கொண்டேன். |
|
Last Updated on Wednesday, 07 December 2011 22:40 |
|
Read more...
|
|
Latest
|
|
Written by Dr.எம். கே. முருகானந்தன்
|
|
Monday, 25 July 2011 07:25 |
|
தியானம் எமது பாரம்பரிய வாழ்க்கை முறையோடு இணைந்தது. புராணங்களில் நாம் அறிந்த ஞானிகளும் முனிவர்களும் இவற்றைக் கடைப்பிடித்து ஆன்மீக உச்சங்களை எட்டியுள்ளார்கள். அவர்கள் மட்டுமின்றி இன்றைய சாமிகளும் ஆசாமிகளும் கூட இவற்றைப் பற்றிப் பேசுகிறார்கள். தொடர்ந்து செய்யும்படி ஆலோசனைகளும் வழங்குகிறார்கள். பல ஆன்மீக நிறுவனங்கள் இலவச தியான வகுப்புகளை நடத்தவும் செய்கின்றன.
கீழைத்தேய வாழ்வியலோடு கூடிய தியானம் இப்பொழுது மேலை நாடுகளிலும் பிரபலமாகிவிட்டது. அமெரிக்க அரசின் ஆதரவோடு 2007ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9.4 சதவிகிதமானோர் அதற்கு முந்தைய ஒரு வருட காலப்பகுதியில் தியானம் செய்திருப்பது தெரியவந்தது. தியானங்கள் பல வகைப்படும். ஆயினும் அவற்றின் அடிப்படை நோக்கமானது ஒன்றுதான். மனதை அமைதிப்படுத்தி, உடலைத் தளரச் செய்து உளவியல் ரீதியான சமநிலை நோக்கி முன்னேறுவதுதான். பொதுவாக உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் நோய்களிலிருந்து விடுபட்டு நல்லாரோக்கியமான நிலையை அடைவதற்கான முயற்சியாகக் கொள்ளலாம். |
|
Last Updated on Monday, 25 July 2011 08:09 |
|
Read more...
|
|
Latest
|
|
Written by John Smythe
|
|
Monday, 04 April 2011 06:57 |
BELIEVABLE CHARACTERS IN ONE-MAN SHOW |  |
The Mourning After Written and performed by Ahi Karunaharan Directed by Miria George Tawata Productions
at THE BOX, Buick St, Petone, Wellington From 30 Mar 2011 to 2 Apr 2011 [1hr]
Reviewed by Ewen Coleman, 1 Apr 2011 originally published in The Dominion Post
|
Telling one’s story is an important part of any culture and using theatre as a medium f0r this is becoming increasingly popular. It is therefore interesting to see this happening with what many would consider a lesser known culture within NZ society, that of the Sri Lankans. Although born in the Britain and raised in Sri Lanka for the first seven years of his life writer, performer Ahi Karunaharan has spent the past 21 years in NZ, including graduating from Toi Whaakari: NZ Drama School. Although born in the Britain and raised in Sri Lanka for the first seven years of his life writer, performer Ahi Karunaharan has spent the past 21 years in NZ, including graduating from Toi Whaakari: NZ Drama School.
|
|
Last Updated on Wednesday, 06 April 2011 05:32 |
|
Read more...
|
|
Latest
|
|
Written by Chandra
|
|
Monday, 08 February 2010 06:42 |
முல்லைக்கடல் தனக்கேயுரிய அமைதி கலந்த ஆரவாரத்துடன் எம்மை வரவேற்றது. அலைகள் நிதானமாக எழுந்து, சரிந்து வந்து கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன. வான் கடலோடு முட்டிக் கொண்டிருந்தது. சின்ன வயதில் பருத்தித்துறைக் கடற்கரையில் நின்று, எதிர்க்கரையைத் தொட்டுக் கொட்டிருக்கும் வானத்தை ஒரு தடவையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்று தீராத ஆவல் கொண்டு மனம் அலைந்த நாட்கள் சட்டென்று நினைவில் வந்து போயின. கடற்படைத் தளபதி கேணல் சூசை அவர்கள் மணலிலேயே கதிரைகளும், மேசையும் போட்டு எமக்காகக் காத்திருந்தார். சொன்ன நேரத்தையும் விடத் தாமதமாகவே வந்திருந்தோம். மாலையாகிக் கொண்டிருந்ததால் சுட்டெரிக்கும் வெயில் இன்றி இதமான மெல்லிய குளிர்காற்று எம்மைத் தழுவியது. இன்முகத்துடன் சூசை எம்மை வரவேற்றார்... more |
|
Last Updated on Monday, 01 November 2010 07:42 |
|
|
Latest
|
|
Written by Chandra
|
|
Friday, 18 November 2011 23:10 |
இணையத்தில் தமிழ்/தமிழர் தொடர்பான கட்டற்ற (public domain) பல்லூடக ஆவணங்களை (படங்கள், ஒலிக்கோப்புக்கள், நிகழ்படங்கள்) அதிகரிக்கும் நோக்கில் தமிழ் விக்கியூடகம் ஒரு போட்டியை நவம்பர் 15, 2011 இல் இருந்து பெப்ரவரி 29, 2012 வரை நடத்துகிறது. எவ்வளவோ நாட்களாக நீங்கள் எடுத்த பல படங்களும் பிறவும் உங்கள் கணினியில் மட்டும் இருந்துவிடாமல், எல்லோருடனும் பகிரும் வண்ணம் உங்கள் பங்களிப்பை வழங்கி பல பரிசுகளைப் (9 பரிசுகள்) பெறும் வாய்ப்பைப் பெறுங்கள். உங்கள் பங்களிப்பு வெவ்வேறு விக்கியூடங்களில் காட்சிப்படுத்தப்படும். மேலதிக விபரங்களை http://ta.wikipedia.org/wiki/Contest என்ற முகவரியில் பெறலாம். மேலும் இந்த போட்டியை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும் உதவுங்கள். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தகுந்த பதில்களைப் பெறலாம். |
|
Last Updated on Tuesday, 22 November 2011 09:43 |
|
சிறுகதைகள்
|
|
Written by தாளையடி சபாரத்தினம்
|
|
Saturday, 24 September 2011 06:10 |
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள் தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து. உயிருக்குயிரான காவலாளியுங்கூட.... காலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.
|
|
Last Updated on Sunday, 25 September 2011 06:57 |
|
Read more...
|
|
பத்திகள்
|
|
Written by சந்திரா ரவீந்திரன்
|
|
Tuesday, 28 June 2011 07:16 |
|
அது ஒரு காலம்! நினைவுகளும் கனவுகளும் நிரம்பி வழிய, இலக்கை அடைந்திடலாம் என்ற நம்பிக்கையில் இடர்களைப் பொருட்படுத்தாமல் சுமைகளை இறக்கி வைக்காமல் நீளமாய் நடந்து கொண்டேயிருந்த காலம்! அது ஒரு ஆடி மாத நடுப்பகுதி.... கொளுத்தி எரியும் வெயிலில் யாழ்மண் கருகிக் கொண்டிருந்தது! இராணுவக் கெடுபிடிகள் தாளாமல், வடமராட்சி மண்ணில் சொந்த வீட்டை விட்டு, யாழ் மண்ணிற்கு இடம்பெயர்ந்து சுய அடையாளங்களை மறைக்க முயன்று கொண்டு இருக்கிற போதும் பிறந்து வளர்ந்த ஊரும், தவழ்ந்து மகிழ்ந்த வீடும் மனதிற்குள் வந்துவந்து, எங்களை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்! எனக்குத் திருமணப் பேச்சுக்கள் நடைபெறுகிறது ஒரு புறம்! என் குட்டித் தங்கை குதியன் குத்திக் கொண்டு, வேம்படிச் சிநேகிதிகளுடன் யாழ் நகரம் முழுவதும் சைக்கிளில் ஊர்வலம் சென்று வருவது மறுபுறம். சுற்றிவர முகாமிட்டிருக்கும் இந்திய இராணுவத்திற்கு இவளின் குடும்ப வேதம் எதுவும் இன்னமும் தெரியாது என்ற தைரியம் அவளுக்கு! |
|
Last Updated on Tuesday, 28 June 2011 07:52 |
|
Read more...
|
|
Heroes
|
|
Written by திலீபன்
|
|
Wednesday, 01 July 2009 08:30 |
பரதரராஜன்.தியாகராஜா - ஆத்தியடி, பருத்தித்துறை நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன் மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...! என்றான். அவன்தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத் துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான். நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.
சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான். |
|
Last Updated on Monday, 01 November 2010 07:50 |
|
Read more...
|
|
Heroes
|
|
Written by சிவா தியாகராஜா
|
|
Wednesday, 01 July 2009 08:43 |
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான்.
எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். |
|
Last Updated on Monday, 01 November 2010 07:45 |
|
Read more...
|
|