பொழுது பொறந்து எவ்வளவு
நேரமாச்சு
பொட்டச்சிக்கு என்னடி
தூக்கம்?
ஆம்பளப் புள்ளைக
திங்கிற முன்னாடி
எங்கடி உக்காந்துட்டவ...
வெளிய போறவகளுக்கு
குளிக்க இடம்விடாம
என்னடி பண்ணுறவ
பாத்ரூமுல..
வேலைய பார்க்காம
என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு
போன்ல...
வாசத்தெளிச்சு
காபி வச்சுக் கொடுக்காம
இன்னும் எம்புட்டு நேரந்தே
பாத்திரம் கழுவுவ?
சம்பாரிச்சுட்டு வாரவகளுக்கு
ஹோட்டல்கள்ல திங்கவிடாம
சூடா ஏதாச்சும்
செஞ்சு கொடுடி..
கூட்டி பாயவிரிச்சுவிட
இம்புட்டு நேரமா?
தினமும் இதையே
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
என்னைப் பார்த்து...
அவளை அவளது அம்மா
சொன்னது போலவே!
- ஞான பாரதி
காலங் காலமாய்
ஞான பாரதி
கவிதை/Poem/Gedicht