Literatur -
கவிதைகள்
|
Written by சந்திரா ரவீந்திரன்
|
Friday, 03 July 2009 16:17 |

வல்வை மண் தந்த - வீரத் தமிழ்ப் பொட்டு! வெல்வோம் நாம் என்று நல்ல தமிழ் மண் மீட்கத் துள்ளியெழுந்த தூய புலிவீரன் - அவன் கிட்டு! இல்லை என்ற சொல் துறந்து கால் இல்லை என்று ஆன பின்னும் தன் பணியை மண் பணியாய் தன் நெஞ்சில் சுமந்தான் - தன் நலம் விட்டு!
தலைவனுக்கு ஒரு கையாய் தமிழ் மண்ணிற்கோ தளபதியாய் நிலை இழந்த மக்களிற்கு நீதிபதியாய் கலையுள்ளம் கொண்ட காளை - இவன் வாழ்ந்த காலமதோ மிக மட்டு!
தாய் மண்ணைத் துறந்தது மட்டுமல்ல தன் பெண்ணையும் துறந்திங்கு அந்நிய மண்ணில் அவனிருந்தாலும் எண்ணியதெல்லாம் ஈழமண் விடிவுதான்! மண்ணைப் பொன்னாக்க அவன் செய்த புண்ணியங்கள் ஆயிரம் ஆயிரம்!
இதயம் பிழியும் இடர்கள் நேர்ந்து - பன்னிரண்டு ஆண்டுகள்! நெஞ்சம் மகிழ........தன் மண் நோக்கிப் புறப்பட்ட மாவீரன்! என்ன நினைத்திருப்பான்?
வங்கக் கடலலையும் வழியனுப்பி வாழ்த்திசைக்க - இந்தியமோ - இன்னோர் இழிசெயலை இருளில் திணித்து விட நம் வீரர் தமக்காக வாழ்பவரல்லவே! திண் வீரர் - மண் காக்க - விண்ணை உடைத்தொருகால் வீர இடிமுழங்க -
தண்ணென்ற நீரலையில் தம்மைக் கரைத்தனரே! விண் வீரன் - கிட்டு நீ எங்கள் காவிய நாயகன்.
சந்திரா இரவீந்திரன் இலண்டன் Comments
|
Last Updated on Friday, 03 July 2009 16:25 |